இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் தற்கொலை செய்து கொண்ட உதகை மாணவன் - உடலை இந்தியா கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!

நீலகிரி: கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி இத்தாலியில் தற்கொலை செய்து கொண்ட நீலகிரியைச் சேர்ந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரி: கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி இத்தாலியில் தற்கொலை செய்து கொண்ட நீலகிரியை சேர்ந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தூனேரி பகுதியை சேர்ந்த விவசாயி சதானந்தா. இவரது மனைவி புஸ்பா. இவர்களுக்கு சுஜித் பிரதீக்ஸ் என்ற மகன் உள்ளனர். சுஜித் இத்தாலி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் பிரதீக்ஸ் (20) இத்தாலி நாட்டில் நேப்பில்ஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

இத்தாலியில் கொரோனா தொற்று அதிகரித்ததால் நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் இவர் மட்டும் இந்தியராக இருந்ததால் தனியாக ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், தனது அண்ணன் சுஜித் இருக்கும் பெர்மோ என்ற இடத்திற்கு சென்று அவருடன் தங்கியுள்ளார்.

இருப்பினும் மன உளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து பிரதீக்ஸ் மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். நல்ல நிலையில் இருந்த பிரதீக்ஸ் கடந்த திங்களன்று 3வது மாடி தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் வேண்டுகோளை ஏற்று தமிழக பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை தொடர்பு கொண்டு மாணவன் பிரதீக்ஸின் உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவு துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...