கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
மேலும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சோதனை மேற்கொண்டு உள்ளார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சியாளர் விடுதி காவலர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மீதம் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வளாகத்தை மூடவும் அறிவுறத்தபட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
மேலும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சோதனை மேற்கொண்டு உள்ளார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சியாளர் விடுதி காவலர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மீதம் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வளாகத்தை மூடவும் அறிவுறத்தபட்டுள்ளது.