கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஆறு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மேலும் நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஆறு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மேலும் நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 4,000 திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
இதனிடையே, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கடந்த ஜூலை 17ம் தேதி ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக ஐந்து நவீன ரோபோக்கள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
தற்போது, இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன என்பதால் மேலும் 4 நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை அடைப்புகளை எதிர்பார்த்த அளவு ரோபோக்கள் நன்கு சுத்தம் செய்து வருகின்றன. எனவே, மேலும் 4 ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.