கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்த விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்த விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் அவனது காதலி அமானி தாஞ்சி கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போல், அங்கொட லொக்காவிற்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூர் பகுதியை செந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டஅம்மானி தாஞ்சி, சிவகாமி சுந்தரி, தியானேஸவரன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
சிபிசிஐடி போலீசார் ஐந்து நாட்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகுமார் அனுமதி அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அமானி தாஞ்சி, தியானேஸ்வரன் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மற்றொருவரான சிவகாமி சுந்தரி, சிபிசிஐடி காவலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தார். இவர்கள் மூவரையும் வரும் 15ம் தேதி 2 மணிக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.