வேறு மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வர, இதுவரை 4.98 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - மாவட்ட நிர்வாகம்

கோவை: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் இதுவரை கோவை மாவட்டம் வருவதற்கு இ-பாஸ் கேட்டு ஆன்லைன் மூலம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன, என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் இதுவரை கோவை மாவட்டம் வருவதற்கு இ-பாஸ் கேட்டு ஆன்லைன் மூலம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன, என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:

இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவரது விண்ணப்பம் சரியான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதும், மறுபடியும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஒரு சிலர் 10 விண்ணப்பங்கள் வரை மீண்டும், மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். இதனால் இ-பாஸ் விண்ணப்பங்களின் எண்ணிகை அதிகமாக உள்ளது.

உரிய காரணங்களுடன், சரியான ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ள அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்படுகின்றன.

மருத்துவ அவசர தேவைக்கு கடந்த மார்ச் முதல் தற்போது வரை இ-பாஸ் கேட்டு 1,74,250 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 1,28,384 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. 44,622 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 33,745 விண்ணப்பங்கள் வந்ததில் 9,891 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, 23,205 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன.

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15,516 விண்ணப்பங்கள் வந்ததில், 4,411 விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 10,979 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன.

வெளி மாவட்டங்களில் சிக்கிக்கொண்டு சொந்த மாவட்டமான கோவை திரும்ப 2,04,932 விண்ணப்பங்கள் வந்ததில், 45,612 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 1,57,718 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன, என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...