கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை கடத்தி சென்ற சுந்தரராஜனை தேடி வந்தனர். இதனிடையே, தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் சென்ற போலீசார், திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கி இருந்த சுந்தர்ராஜனை கைது செய்து ஐந்து மாதங்களாக காணாமல் போன சிறுமியை மீட்டனர்.

இதனை தொடர்ந்து, சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...