பொள்ளாச்சியில் கொரோனாவுக்கு பூ வியாபாரி இறந்ததால், தேர்நிலை பூ மார்க்கெட் மூடப்பட்டது

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஆசிரமம் வீதியில் வசித்த பூ வியாபாரி ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஆசிரமம் வீதியில் வசித்த பூ வியாபாரி ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.

நேற்று முன்தினம் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது வழியிலேயே மூச்சு திணரல் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து, ஜமீன் ஊத்துக்குளியில் அவர் வசித்த வீடு மற்றும் அருகே உள்ள வீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தேர்நிலையத்திலிருந்து கடைவீதிக்கு செல்லும் வழியில் உள்ள பூ மார்க்கெட்டில் வேலை பார்த்த பூ வியாபாரி, இறந்தது அப்பகுதி வியாபரிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. எனவே, பூ மார்க்கெட்டை தற்காலிகமாக மூட சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. பூ மார்க்கெட் மற்றும் மார்க்கெட் அருகே உள்ள சில கடைகளும் அடைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...