அட்டப்பாடியில்‌ வாரத்தில்‌ ஏழு நாட்களும் விவசாயம்‌ செய்து வர அனுமதிக்க வேண்டும் - தடாகம்‌ பகுதி விவசாயிகள் கோரிக்கை!

கோவை: தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா அட்டப்பாடியில்‌ அனைத்து விவசாயிகளையும்‌ வாரத்தில்‌ ஏழு நாட்களும் விவசாயம்‌ செய்ய அனுமதி வழங்க வேண்டும்‌ என்று ஆனைகட்டி மற்றும் தடாகம்‌ பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா அட்டப்பாடியில்‌ அனைத்து விவசாயிகளையும்‌ வாரத்தில்‌ ஏழு நாட்களும் விவசாயம்‌ செய்ய அனுமதி வழங்க வேண்டும்‌ என்று ஆனைகட்டி மற்றும் தடாகம்‌ பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இரவு, பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்று நோய்‌ பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில எல்லையில்‌ ஆனைகட்டியில்‌ காவல்‌ துறையினர்‌ சோதனை சாவடிகள்‌ அமைத்து சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்‌.

இதன் காரணமாக, கோவை ஆனைகட்டி கிராமம்‌, தடாகம்‌ கிராமம்‌ மற்றும்‌ சுற்றுப்பகுதியில்‌ குடியிருந்து கொண்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா அட்டப்பாடியில்‌ சோலையூர்‌ கிராமம்‌, கோட்டத்துரை கிராமம்‌, அகழி ஆகிய இடங்களில் சொந்த நிலங்களில்‌ விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அனைத்து விவசாயிகளையும்‌ வாரத்தில்‌ ஏழு நாட்களும் விவசாயம்‌ செய்து வர அனுமதி வழங்க வேண்டும்‌, அனைத்து விவசாயிகளுக்கு விவசாய அடையாள்‌ அட்டை வழங்க வேண்டும்‌, விவசாயிகள்‌ விளை நிலங்களில்‌ பயிரிடக்கூடிய விளை பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்ல எல்லா நாட்களிலும் ‌அனுமதிக்க வேண்டும்‌, விவசாயம்‌ சம்பந்தப்பட்ட கருவிகள்‌, உரங்கள்‌ மற்றும்‌ கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள்‌ எடுத்து செல்லவும்‌, விவசாயம்‌ சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று வரவும்‌ எல்லா நாட்களிலும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்று ஆனைகட்டி மற்றும் தடாகம்‌ பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும், கொரோனா தொற்று நோய்‌ பாதுகாப்பு வழிமுறைகளையும்‌, அறிவுரைகள் அனைத்தும் பின்பற்றி நடந்து கொள்வதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...