கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாரில் மின்சார வசதியில்லாத பழங்குடியின மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் இன்று தொடங்கின.
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாரில் மின்சார வசதியில்லாத பழங்குடியின மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் இன்று தொடங்கின.
பொள்ளாச்சி வனச்சரக உட்பட்ட பகுதிகளில் நவமலை, சின்னாறு, சர்கார்பதி, கூமாட்டி, எருமை பாறை, உள்ளிட்ட 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்களுக்காக அந்தந்த பகுதிகளில், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலுள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதில் சிக்கல் எழுந்தது. மின்சார வசதி, செல்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால், அரசு பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பாடம் நடத்த வேண்டும், என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று முதல் முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில், ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, 18 மாணவர்களுக்கு, தனித்தனி அறைகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.

பொள்ளாச்சி வனச்சரக உட்பட்ட பகுதிகளில் நவமலை, சின்னாறு, சர்கார்பதி, கூமாட்டி, எருமை பாறை, உள்ளிட்ட 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்களுக்காக அந்தந்த பகுதிகளில், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலுள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதில் சிக்கல் எழுந்தது. மின்சார வசதி, செல்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால், அரசு பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பாடம் நடத்த வேண்டும், என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று முதல் முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில், ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, 18 மாணவர்களுக்கு, தனித்தனி அறைகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.