பணத்தில் மட்டுமல்லாமல் பிணத்திலும் தமிழக அரசு ஊழல் செய்வதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர்பலி எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதால், பணத்தில் மட்டுமல்லாமல் பிணத்திலும் தமிழக அரசு ஊழல் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர்பலி எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதால், பணத்தில் மட்டுமல்லாமல் பிணத்திலும் தமிழக அரசு ஊழல் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், கடந்த இரண்டு தினங்களாக மாநில செயலாளர் முத்தரசன் காணொலிக் காட்சி வாயிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வந்தார்.

அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் , கொரோனா களப் பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அறிவித்துவிட்டு, அறிவிப்பானையில் ரூபாய் 25 லட்சம் என வெளியிட்டுள்ளது அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போகும் எனவும் உடனடியாக அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இ-பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதால், அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும்

பொதுப் போக்குவரத்தை தளர்வுகளுடன் இயக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில், கட்சி அலுவலகங்கள் மீதும் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகாரளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர் பதிவிட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து எந்தவித கருத்தும் கேட்காமல், நாடாளுமன்றத்தில் விவாதமும் செய்யாமல், அமல்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, பல சட்டங்களை மத்தியரசு அவசரமாக விவாதமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

எனவே, அவசரத்தில் செயல்முறைபடுத்தப்பட்ட சட்டங்கள் திரும்ப பெற வேண்டும், என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...