நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமான மலை பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமான மலை பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் ஆயிரகணக்கான ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதன் மிக அருகேயே தேனாடு வனப்பகுதியும் உள்ளது.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று எஸ்டேட் பகுதியில் இருப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனவர்கள், தேயிலை தோட்டத்தில் படுத்துக் கிடந்த மலைப்பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அருகிலுள்ள தேனாடு காப்பு வனச்சரகத்தில் கொண்டு விட்டனர்.
இது குறித்து, வன அதிகாரிகள் கூறும்போது, மலைப்பாம்பு ஏதோ உணவினை விழுங்கி இருப்பதால் நகரமுடியாமல் இருந்ததாகவும், சுமார் எட்டு அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து காப்புக் காட்டில் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் ஆயிரகணக்கான ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதன் மிக அருகேயே தேனாடு வனப்பகுதியும் உள்ளது.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று எஸ்டேட் பகுதியில் இருப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனவர்கள், தேயிலை தோட்டத்தில் படுத்துக் கிடந்த மலைப்பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அருகிலுள்ள தேனாடு காப்பு வனச்சரகத்தில் கொண்டு விட்டனர்.
இது குறித்து, வன அதிகாரிகள் கூறும்போது, மலைப்பாம்பு ஏதோ உணவினை விழுங்கி இருப்பதால் நகரமுடியாமல் இருந்ததாகவும், சுமார் எட்டு அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து காப்புக் காட்டில் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.