கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக அரசு மூலமாக வழங்கக்கூடிய விலையில்லா ரேஷன் அரிசி, பருப்பு என பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. வால்பாறையில் உள்ள கிடங்கிலிருந்து, பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யபட்டு வருகிறது.
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதால் மலைவாழ் மக்கள் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மேலும் குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் போது சேற்றில் சிக்கி விபத்துக்கள் நடக்கின்றன.

இந்த நிலையில், நேற்று கீழ்பூணாச்சி செட்டில்மெண்டுக்கு ரேஷன் பொருள் கொண்டு சென்ற லாரி, மண் சாலையில் செல்லும் பொழுது சேற்றில் சிக்கியது.

அக்குடியிருப்பில் இருந்த மலைவாழ் மக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி சேற்றில் சிக்கிய லாரியை மீட்டனர்.
இது குறித்து, மலைவாழ் மக்கள் கூறுகையில்:
மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எங்கள் பகுதிகளுக்கு காட்டு வழி பாதையில் வரும் பொழுது சேற்றில் சிக்கி விடுகிறது. சில சமயங்களில் ரேஷன் பொருட்கள் வந்து சேர முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், காட்டுப்பகுதியில் வாழும் எங்களுக்கு உணவுப் பொருட்கள் இல்லாமல் சில சமயங்களில் மிகுந்த சிரமப்பட்டு உள்ளோம், என தெரிவித்தனர்.
இதனால், தமிழக அரசு அவர்கள் வாழும் பகுதிகளை இணைக்கும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசு மூலமாக வழங்கக்கூடிய விலையில்லா ரேஷன் அரிசி, பருப்பு என பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. வால்பாறையில் உள்ள கிடங்கிலிருந்து, பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யபட்டு வருகிறது.
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதால் மலைவாழ் மக்கள் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மேலும் குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் போது சேற்றில் சிக்கி விபத்துக்கள் நடக்கின்றன.
இந்த நிலையில், நேற்று கீழ்பூணாச்சி செட்டில்மெண்டுக்கு ரேஷன் பொருள் கொண்டு சென்ற லாரி, மண் சாலையில் செல்லும் பொழுது சேற்றில் சிக்கியது.
அக்குடியிருப்பில் இருந்த மலைவாழ் மக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி சேற்றில் சிக்கிய லாரியை மீட்டனர்.
இது குறித்து, மலைவாழ் மக்கள் கூறுகையில்:
மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எங்கள் பகுதிகளுக்கு காட்டு வழி பாதையில் வரும் பொழுது சேற்றில் சிக்கி விடுகிறது. சில சமயங்களில் ரேஷன் பொருட்கள் வந்து சேர முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், காட்டுப்பகுதியில் வாழும் எங்களுக்கு உணவுப் பொருட்கள் இல்லாமல் சில சமயங்களில் மிகுந்த சிரமப்பட்டு உள்ளோம், என தெரிவித்தனர்.
இதனால், தமிழக அரசு அவர்கள் வாழும் பகுதிகளை இணைக்கும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.