ரேசன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்திற்காக கோவை வந்த 70 ஆயிரம் முககவசங்கள் தரமற்றவை என கூறி அதிகாரிகள் அதனை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கோவை: ரேசன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்திற்காக கோவை வந்த 70 ஆயிரம் முககவசங்கள் தரமற்றவை என கூறி அதிகாரிகள் அதனை திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் ரேசன் கார்டில் உள்ளகுடும்ப உறுப்பினர் ஒருவருக்குதலா 2 முகக்கவசம் வீதம் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 9 லட்சம் ரேசன்கார்டு தாரர்களுக்கு 82 லட்சம் முகக்கவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசங்கள் கோவை வந்தடைந்தன. இதில் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமில்லை என்று கூறி திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 1,442 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்ளுக்கு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இந்த முகக்கவசங்களின் தரம் குறித்துகைத்தறி துறையினர் பரிசோதனை செய்து எங்களிடம் வழங்குவார்கள். கோவைக்கு முதற்கட்டமாக தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசம் வந்தன. இதில், சுமார் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமின்றி உள்ளதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் ரேசன் கார்டில் உள்ளகுடும்ப உறுப்பினர் ஒருவருக்குதலா 2 முகக்கவசம் வீதம் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 9 லட்சம் ரேசன்கார்டு தாரர்களுக்கு 82 லட்சம் முகக்கவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசங்கள் கோவை வந்தடைந்தன. இதில் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமில்லை என்று கூறி திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 1,442 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்ளுக்கு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இந்த முகக்கவசங்களின் தரம் குறித்துகைத்தறி துறையினர் பரிசோதனை செய்து எங்களிடம் வழங்குவார்கள். கோவைக்கு முதற்கட்டமாக தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசம் வந்தன. இதில், சுமார் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமின்றி உள்ளதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.