கோவையில் ஞாயிறு ஊரடங்கு நாளில் ஜோராக நடைபெற்ற மது விற்பனை..!
கோவை: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஞாயிறன்று எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை தடாகம் பகுதி அருகே உள்ள கோவில்மேடு மதுபான கடையில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் ஒரே இடத்தில் அமர்ந்து மது அருந்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காலத்திலும் பல இடங்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் இன்று கோவை தடாகம் சாலையிலுள்ள மதுபான கடை எண் 1625 யில் மது பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது.
கொரொனா தொற்று காரணமாக மதுபானம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கோவையில் தடையை மீறி ஊராடங்கின் போது நூற்றுக்கும் மேற்பட்டடோர் டாஸ்மாக்கில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை ஊடகங்கள் வீடியோ எடுப்பதை அறிந்த கடை ஊழியர்கள் உடனடியாக மதுபான கடைக்கு செல்லும் கதவை முடிவிட்டு, உள்ளே விளக்கையும் அனைத்தனர்.
இதனையடுத்து, உள்ளே மது அருந்தி கொண்டிருந்தவர்கள்செய்வதறியாது உள்ளேயே சுற்றி சுற்றி வந்தனர்.
கோவை மாவட்டத்திலேயே கள்ள மதுபான விற்பனையில் இந்த கடையின் பங்கு பெரியளவில் இருப்பதாகவும்,அருகிலேயே காவல் துறை சோதனைச்சாவடி இருந்தும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
ஊரடங்கு காலத்திலும் பல இடங்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் இன்று கோவை தடாகம் சாலையிலுள்ள மதுபான கடை எண் 1625 யில் மது பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது.
கொரொனா தொற்று காரணமாக மதுபானம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கோவையில் தடையை மீறி ஊராடங்கின் போது நூற்றுக்கும் மேற்பட்டடோர் டாஸ்மாக்கில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை ஊடகங்கள் வீடியோ எடுப்பதை அறிந்த கடை ஊழியர்கள் உடனடியாக மதுபான கடைக்கு செல்லும் கதவை முடிவிட்டு, உள்ளே விளக்கையும் அனைத்தனர்.
இதனையடுத்து, உள்ளே மது அருந்தி கொண்டிருந்தவர்கள்செய்வதறியாது உள்ளேயே சுற்றி சுற்றி வந்தனர்.
கோவை மாவட்டத்திலேயே கள்ள மதுபான விற்பனையில் இந்த கடையின் பங்கு பெரியளவில் இருப்பதாகவும்,அருகிலேயே காவல் துறை சோதனைச்சாவடி இருந்தும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.