கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது அங்குள்ள காப்புக்காட்டில் முள்ளாங்காடு அருகே பெண் யானை ஒன்று நகர முடியாமல் மயங்கிய நிலையில் தரையில் கிடந்திருப்பதை கண்டனர்.
இந்த தகவல் உடனே வன மருத்துவருக்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த யானைக்கு 10 முதல் 12 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.

கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர். ஐ. அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர், டி வெங்கடேஷ் மேற்பார்வையில் வன கால் நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வடவள்ளி கால் நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கபட்ட காட்டு யானை மிகவும் பலவீனம் அடைந்து நீர் சத்து இல்லாமல் இருந்துள்ளது எனவும்,
அதனால் தான் மயங்கி கீழே விழுந்திருக்கும் என்றனர்.

அந்த யானைக்கு ஆண்டிபாயடிக்ஸ், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்த குளுக்கோஸ் மருந்துகளை வழங்கியுள்ளோம், என்று தெரிவித்தனர்.
அந்த யானையை வன ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது,முன்னேற்றம் அடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவல் உடனே வன மருத்துவருக்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த யானைக்கு 10 முதல் 12 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர். ஐ. அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர், டி வெங்கடேஷ் மேற்பார்வையில் வன கால் நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வடவள்ளி கால் நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கபட்ட காட்டு யானை மிகவும் பலவீனம் அடைந்து நீர் சத்து இல்லாமல் இருந்துள்ளது எனவும்,
அதனால் தான் மயங்கி கீழே விழுந்திருக்கும் என்றனர்.
அந்த யானைக்கு ஆண்டிபாயடிக்ஸ், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்த குளுக்கோஸ் மருந்துகளை வழங்கியுள்ளோம், என்று தெரிவித்தனர்.
அந்த யானையை வன ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது,முன்னேற்றம் அடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.