திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆறாவது ஞாயிற்று கிழமையாக இன்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆறாவது ஞாயிற்று கிழமையாக இன்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1106 ஆக உயர்ந்துள்ள நிலையில், முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் விசாரணைக்கு, பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு காவல்துறையினரால் அடைக்கப்படுள்ளது. இதனால் மாவட்டத்தில், மருந்து மற்றும் மருத்துவமனைகள் தவிர அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு எந்தவித நடமாட்டமும் இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1106 ஆக உயர்ந்துள்ள நிலையில், முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் விசாரணைக்கு, பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு காவல்துறையினரால் அடைக்கப்படுள்ளது. இதனால் மாவட்டத்தில், மருந்து மற்றும் மருத்துவமனைகள் தவிர அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு எந்தவித நடமாட்டமும் இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.