பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி மலைவாழ் கிராம மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.



கடந்த வருடம், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட கனமழையால் காண்டூர் கனல்பகுதியில் பாறை விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைவாழ் மக்கள் இருந்த வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

நள்ளிரவு நடந்த இந்த வெள்ளப் பெருக்கினால் சுந்தரி என்ற இரண்டு வயது பெண் குழந்தை அடித்து செல்லப்பட்டு, 15 நாட்களுக்கு பிறகு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டெடுத்தனர். இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தற்காலிகமாக மின்சார வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு நிரந்தரமாக வீடுகள் கட்டிகொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழக அரசு மூலமாக இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ரூபாய் 4 லட்சம் வழங்கினர். மேலும், எம்எல்ஏ நிதியிலிருந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சார்பில் நிதி வழங்கப்பட்டது. 

சர்கார்பதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி தருவதாக உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ஒரு வருடம் ஆன நிலையில் இன்று வரை அம்மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு கட்டி தராதது அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வரும்நிலையில், எங்கு, இந்த ஆண்டு மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர்.

வனதுறையினர் மட்டும் வருவாய்த்துறையினர் தங்களுக்கு விரைவில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அப்பகுதி மலைவாழ் மக்கள். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...