வால்பாறையில் கனமழை எதிரொலி: அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க சார் ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, சாய்ந்த மரங்கள், வீடுகளுக்குள் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, சாய்ந்த மரங்கள், வீடுகளுக்குள் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்தியநாதன் தலைமையில் பேரிடர் மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கூறுகையில், அபாய நிலையில் உள்ள மக்களை அப்புறப்படுத்த தயக்கம் காட்ட கூடாது. மக்கள் உயிர் காப்பது அவசியம், எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.

மேலும், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல், மின் இணைப்பு தடை இல்லாமல் கிடைக்க நடவடிக்கை, சுத்தமான குடிநீர் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

எனவே, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து 24 மணிநேரமும் செயல்படும் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை மையம் துவக்கப்பட்டுள்ளது எனவும் வால்பாறை பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

நகராட்சி - 04253 222324 வருவாய்த்துறை - 04253 222305 காவல்துறை 94981 01201 என்ற உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வால்பாறை முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவும், அக்கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்தியநாதன் அறிவுறுத்தினார். 

வட்டாட்சியர், ராஜா, நகராட்சி ஆணையாளர், பவுன்ராஜ் காவல்துறை ஆய்வாளர், மகேஸ்வரி, மின்வாரிய பொறியாளர், கார்த்திக் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், தங்கராஜ் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...