கோவை: வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறையில் உள்ள 21-வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு வார்டுகளிலும் கிளைகள் அமைப்பது, கட்சிக் கொடியை ஏற்றுவது, அந்தந்த பகுதியில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சோலையாறு, கல்லாறு, குரங்கு முடி எஸ்டேட், முருகன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி நகர செயலாளர் நெல்லை செல்வம் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு நகர செயலாளர் நெல்லை செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் வால்பாறை அமமுக நகர செயலாளர் செல்வம், செல்வின் லாய், சண்முகம், குமரகுருபரன், கொங்கு மாரிமுத்து, தனலட்சுமி உட்பட ஏராளமான கிளைக் கழக நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறையில் உள்ள 21-வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு வார்டுகளிலும் கிளைகள் அமைப்பது, கட்சிக் கொடியை ஏற்றுவது, அந்தந்த பகுதியில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சோலையாறு, கல்லாறு, குரங்கு முடி எஸ்டேட், முருகன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி நகர செயலாளர் நெல்லை செல்வம் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு நகர செயலாளர் நெல்லை செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் வால்பாறை அமமுக நகர செயலாளர் செல்வம், செல்வின் லாய், சண்முகம், குமரகுருபரன், கொங்கு மாரிமுத்து, தனலட்சுமி உட்பட ஏராளமான கிளைக் கழக நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.