கோவை: இலங்கை அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: இலங்கை அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக போலி ஆவணங்களை தயார்படுத்திய வழக்கில் இலங்கை கொழும்புவை சேர்ந்த அமானி தான்ஞி மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேர் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க 5 நாட்கள் அனுமதி அளிக்க கோரி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அல்லது வியாழக்கிழமை தான் மனு மீதான உத்தரவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.