கோவை: கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கருவுற்று இருந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று மாலை 33 குட்டிகளை ஈன்றுள்ளது.
கோவை: கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கருவுற்று இருந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று மாலை 33 குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்த பாம்பை கவனித்து வந்த பூங்கா அதிகாரிகள், பாம்பு குட்டிகளை பரிசோதனை செய்ததில் அனைத்தும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிக நச்சு தன்மை கொண்ட பாம்பு வகையான கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் வகையை சேர்ந்தது.
வருடத்திற்கு இரு முறை குட்டிகளை ஈனும், இந்த பாம்பு சராசரியாக 30 லிருந்து 40 குட்டிகளை வரை ஈன்றும். ஆனால், இதில் அனைத்து குட்டிகளும் பிழைக்காது, சராசரியாக 20 குட்டிகள் வரை தான் பிழைக்க வாய்ப்புள்ளது.
சாதரணமாக பாம்பு கடித்தால் அதன் விஷத்தன்மை பொறுத்து தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் அது நேரடியாக ரத்த மண்டலத்தை பாதித்து சிறிது நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும், என பூங்கா அதிகாரிகள் கூறினர்.
அதனால் இந்த பாம்பு குட்டிகளை கோவை வனசரகத்திற்கு உட்பட்ட ஆணைக்கட்டி பகுதியில் விடுவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.