கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர் கூட்டத்தில் ஒருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர் கூட்டத்தில் ஒருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடைசியில் இருந்தே சந்தன மர கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்தது. இவர்கள் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை பகுதிகளில் சுற்றித் திரிவது போன்ற வீடியோக்களும் வெளியானது.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் சிலரை கைது செய்தனர். ஆனால் கைது செய்து சில மாதங்களிலேயே மீண்டும் சிங்காநல்லூர் பகுதிகளில் அதே போன்று இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் மீண்டும் வெளியாகியது.
இப்படி கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் அரை டவுசருடன் உடம்புகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை சூலூர் காவல் எல்லைகளில் சுற்றித் திரிகின்றனர், எனவும், தற்போது அரை டவுசருடன் சுற்றி வரும் இந்தக் கொள்ளையர்கள் வீடுகளில் ஆட்கள் இருக்கும் பொழுதே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று வருகின்றனர், என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், பாஸ்கரன், மற்றும் காவலர்கள் ரியாஸ், துர்கா ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு எஸ் ஐ எச் எஸ் காலனியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, குறைவான ஆடையுடன் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கூட்டத்தில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இவர் பெயர் வீரமணி என்பதும் இவர் மீது ஏற்கனவே மூன்று கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவருடன் தொடர்பில் உள்ள கொள்ளையர்களை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடைசியில் இருந்தே சந்தன மர கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்தது. இவர்கள் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை பகுதிகளில் சுற்றித் திரிவது போன்ற வீடியோக்களும் வெளியானது.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் சிலரை கைது செய்தனர். ஆனால் கைது செய்து சில மாதங்களிலேயே மீண்டும் சிங்காநல்லூர் பகுதிகளில் அதே போன்று இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் மீண்டும் வெளியாகியது.
இப்படி கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் அரை டவுசருடன் உடம்புகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை சூலூர் காவல் எல்லைகளில் சுற்றித் திரிகின்றனர், எனவும், தற்போது அரை டவுசருடன் சுற்றி வரும் இந்தக் கொள்ளையர்கள் வீடுகளில் ஆட்கள் இருக்கும் பொழுதே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று வருகின்றனர், என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், பாஸ்கரன், மற்றும் காவலர்கள் ரியாஸ், துர்கா ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு எஸ் ஐ எச் எஸ் காலனியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, குறைவான ஆடையுடன் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கூட்டத்தில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இவர் பெயர் வீரமணி என்பதும் இவர் மீது ஏற்கனவே மூன்று கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவருடன் தொடர்பில் உள்ள கொள்ளையர்களை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.