திருப்பூர்: திருப்பூரில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக 200 மையங்களில் இன்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக 200 மையங்களில் இன்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, , ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த தொழிலாளர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்க வேண்டும், ஆதார் அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை அருகே சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், எம் எல் எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே, கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 மையங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, , ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த தொழிலாளர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்க வேண்டும், ஆதார் அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை அருகே சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், எம் எல் எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே, கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 மையங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.