நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர், உதகை தமிழக விருந்தினர் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், கனமழையால் மரம் விழுந்து இறந்த இரண்டு குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 4 லட்சம் நிதி உதவி தொகையை அறிவித்தார்.
மேலும், 45 ஆண்டுகளாக நீலகிரியில் வாழும் மலையாள மக்களின் இனமாக இழுவதீயா பிரிவினர்கான சாதி சான்றிதழை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறும் போது:
நீலகிரியில் கடந்த ஆண்டு மழையின் போது நீலகிரி எம்.பி.ஆ.ராசா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார். ஆனால், அதெல்லாம் பேச்சோடு சரி, இன்னும் அத்தொகை வந்தபாடில்லை.
நீலகிரியில் வெள்ளத்தால் பாதித்த மின் இணைப்புகளை சீரமைக்க கொடைக்கானலில் இருந்து 40 மின் பணியாளர்கள் நாளை வரவுள்ளதாகவும், அதை தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் கூடலூர், பந்தலூர் பகுதியில் மின் விநியோகம் சீரமைக்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர், உதகை தமிழக விருந்தினர் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், கனமழையால் மரம் விழுந்து இறந்த இரண்டு குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 4 லட்சம் நிதி உதவி தொகையை அறிவித்தார்.
மேலும், 45 ஆண்டுகளாக நீலகிரியில் வாழும் மலையாள மக்களின் இனமாக இழுவதீயா பிரிவினர்கான சாதி சான்றிதழை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.
அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறும் போது:
நீலகிரியில் கடந்த ஆண்டு மழையின் போது நீலகிரி எம்.பி.ஆ.ராசா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார். ஆனால், அதெல்லாம் பேச்சோடு சரி, இன்னும் அத்தொகை வந்தபாடில்லை.
நீலகிரியில் வெள்ளத்தால் பாதித்த மின் இணைப்புகளை சீரமைக்க கொடைக்கானலில் இருந்து 40 மின் பணியாளர்கள் நாளை வரவுள்ளதாகவும், அதை தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் கூடலூர், பந்தலூர் பகுதியில் மின் விநியோகம் சீரமைக்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.