கோவை: வால்பாறையில் கனமழை காரணமாக வீட்டின் மேல் மரம் விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கோவை: வால்பாறையில் கனமழை காரணமாக வீட்டின் மேல் மரம் விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தேயிலை தோட்ட பகுதிகளில் வீடுகளின் மீது மரம் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளான ஸ்டான் மோர், குரங்கு முடி, முருகன் எஸ்டேட், பாரதிதாசன் நகர், வரட்டு பாறை, சோலையார் டேம் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய வால்பாறை அ.இ.அ.தி.மு.க.நகர கழக செயலாளர் மயில் கணேசன், நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், மழைக்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர். நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், அம்மா பேரவை துணை தலைவர் சி .செந்தில் பாலு, பாசறை இணைச் செயலாளர் ஏ. சௌந்தரராஜன், எஸ்.கே.எஸ்.பாலு, சண்முகம், லோகேஸ்வரன், ஜோதி கார்த்தி, ஜான் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தேயிலை தோட்ட பகுதிகளில் வீடுகளின் மீது மரம் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளான ஸ்டான் மோர், குரங்கு முடி, முருகன் எஸ்டேட், பாரதிதாசன் நகர், வரட்டு பாறை, சோலையார் டேம் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய வால்பாறை அ.இ.அ.தி.மு.க.நகர கழக செயலாளர் மயில் கணேசன், நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், மழைக்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர். நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், அம்மா பேரவை துணை தலைவர் சி .செந்தில் பாலு, பாசறை இணைச் செயலாளர் ஏ. சௌந்தரராஜன், எஸ்.கே.எஸ்.பாலு, சண்முகம், லோகேஸ்வரன், ஜோதி கார்த்தி, ஜான் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.