கோவை சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று - வங்கி தற்காலிகமாக மூடல்!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் வழியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் 43 வயது பெண் மேலாளர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் மூலம் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும், வங்கி மேலாளருக்கு தொற்று உறுதியானதால் வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

வரும் திங்கட்கிழமை முதல் வங்கி வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...