கோவை: வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்ததால் சோலையார் அணை மூன்றே நாளில் 38 அடி கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
கோவை: வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்ததால் சோலையார் அணை மூன்றே நாளில் 38 அடி கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. அக்காமலை புல்வெளியை ஒட்டியுள்ள நீரார் அணையில் சேகரிக்கப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலம் சோலையார் அணைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப்பின் பரம்பிகுளம் அணைக்கு சென்று அங்கிருந்து ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணை வழியாக பொள்ளாச்சி உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு பயன்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

165 அடி உயரமுள்ள சோலையார் அணை நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 118 அடி இருந்த நிலையில் இன்று காலையில் 38 அடி உயர்ந்து 157 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 231 மி.மீட்டர், சின்னகல்லாரில் 305 மி.மீ. நீரார் அணையில் 210 மி.மீ, சோலையார் அணையில் 248 மி,மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர். வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் வெள்ளம் ஏற்பட்டுள்ள வாழைத்தோட்டம் ஸ்டேன் மோர், வெள்ளமலை மட்டம் மற்றும் சோலையார் அணைப் பகுதிகளை பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பொழுது உதவிக்காக அதிரடிப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. அக்காமலை புல்வெளியை ஒட்டியுள்ள நீரார் அணையில் சேகரிக்கப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலம் சோலையார் அணைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப்பின் பரம்பிகுளம் அணைக்கு சென்று அங்கிருந்து ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணை வழியாக பொள்ளாச்சி உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு பயன்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
165 அடி உயரமுள்ள சோலையார் அணை நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 118 அடி இருந்த நிலையில் இன்று காலையில் 38 அடி உயர்ந்து 157 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 231 மி.மீட்டர், சின்னகல்லாரில் 305 மி.மீ. நீரார் அணையில் 210 மி.மீ, சோலையார் அணையில் 248 மி,மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர். வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் வெள்ளம் ஏற்பட்டுள்ள வாழைத்தோட்டம் ஸ்டேன் மோர், வெள்ளமலை மட்டம் மற்றும் சோலையார் அணைப் பகுதிகளை பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பொழுது உதவிக்காக அதிரடிப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.