அவிநாசி பகுதியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.








திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான தொழிற்சாலையில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை கடந்த மாதம் 29ம் தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் மீட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகப்படியாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், அந்த நூற்பாலையில் ஆய்வு செய்தனர்.



அதன் அடிப்படையில், அந்த நூற்பாலையில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என 38 குழந்தை தொழிலாளர்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் மீட்ட நிலையில், இன்று அந்த 38 பேரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்ற அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேருந்து வசதியும், உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

மேலும் குழந்தை தொழிலாளர்களை வைத்து பணி செய்ய வைத்த ஆலத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலை தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்று குழந்தை தொழிலாளர்களை பணி செய்ய வைக்கும் நிகழ்வு இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...