கோவை: கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, உக்கடம் பகுதியை சேர்ந்த முதியவரும் கொரோனா தொற்றினால் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரும் தொற்றினால் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அதேபோல, கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை நான்கு முதியவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, உக்கடம் பகுதியை சேர்ந்த முதியவரும் கொரோனா தொற்றினால் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரும் தொற்றினால் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அதேபோல, கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை நான்கு முதியவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.