ஆனைமலை பகுதிக்கு உட்பட்ட நவமலை மலைவாழ் கிராமத்தில் வெள்ள பெருக்கு; வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.








கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள, சர்க்கார்பதி, கூமாட்டி, நவமலை உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள், மின்சார பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக அப்பர் ஆழியாறு அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நவமலை செல்லும் தரைமட்ட பாலத்திற்கு மேல் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் மலைவாழ் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 



மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் வேலை இல்லாமல் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வரும் சூழலில், தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, வாடகை வாகனம் ரூ 500 முதல் 1000 வரை தந்து அருகில் உள்ள கோட்டூர் பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

பாலத்தை உயர படுத்தினால் மட்டுமே நிரத்த தீர்வு எனவும், மழை இதே நிலை நீடித்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் என மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர், கடந்த வருடம் பெய்த மழையால் 15 நாட்கள் மேல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...