கோவை: கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.
கோவை: கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
வெள்ளலூர் - சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் - பட்டணம்புதூர் சாலைகளில் தரைப்பாலத்தை ஒட்டி வெள்ள நீர் ஒடி வருகிறது. மழை நீடித்தால் இத்தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.
வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
வெள்ளலூர் - சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் - பட்டணம்புதூர் சாலைகளில் தரைப்பாலத்தை ஒட்டி வெள்ள நீர் ஒடி வருகிறது. மழை நீடித்தால் இத்தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.
வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.