கோவை தடாகம் பகுதியில் சாலையோர மரத்தின் மீது மோதியா கார்; நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி

கோவை: கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் நான்கு பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.


கோவை: கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் நான்கு பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.



இதில் இளைஞர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரேஷ்.(22) இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இண்டர்நேசனல் பிசினஸ் படித்து வருகிறார். இந்நிலையில், இந்திரேசின் நண்பர் வெங்கடேஷ் என்பவரின் பிறந்தநாள் விழா கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.

இதற்கு தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்றுள்ளார்.பிறந்த நாளை கொண்டாடி விட்டு, அதிகாலையில் ஆனைக்கட்டி சாலை வழியாக திரும்பி வந்துள்ளனர்.

அப்போது, இந்திரேஷ் அதிவேகமாக கார் ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காளையனூர் பகுதி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துள்ளானது. 



இதில் இந்திரேஷ், பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜூ, கஸ்தூரி நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் ஹரி, வட கோவையை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், படுகாயமடைந்த வடகோவையை சேர்ந்த பிரஜேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் நான்கு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர், அந்த இளைஞர்கள் யார் யார் எங்கிருந்து வந்தனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது இந்த விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...