கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இரு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இரு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவனையில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 24 கர்ப்பிணி பெண்களுக்கு 14 ஆண் குழந்தைகளும், 10 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவையைச் சேர்ந்த 22 வயது மிதக்கத்தக்க கர்ப்பிணி பெண் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தலைமையிலான மருத்துவர் குழு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவருக்கு இரண்டரை கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொறோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் 2.7 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவனையில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 24 கர்ப்பிணி பெண்களுக்கு 14 ஆண் குழந்தைகளும், 10 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவையைச் சேர்ந்த 22 வயது மிதக்கத்தக்க கர்ப்பிணி பெண் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தலைமையிலான மருத்துவர் குழு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவருக்கு இரண்டரை கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொறோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் 2.7 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.