சிறுமுகை வனப்பகுதியில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு: 20 பேர் கொண்ட சிறப்பு குழு ஆய்வு..!

கோவை: சிறுமுகை வனப்பகுதியில் அடுத்தடுத்து யானைகளின் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை நியமித்துள்ள சிறப்பு குழு ஆய்வை இன்று துவங்கியது.

கோவை: சிறுமுகை வனப்பகுதியில் அடுத்தடுத்து யானைகளின் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை நியமித்துள்ள சிறப்பு குழு ஆய்வை இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களில் பத்து யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்த யானைகள் அனைத்தும் உடல்நலம் பாதிக்கபட்டு, உணவு உட்கொள்ள உடல் மெலிந்து ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்ததால் யானையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது புரியாது புதிராகவே இருந்துள்ளது.

குறிப்பாக, வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், வனத்துறையினர் குழு அமைத்து தொடர் யானைகளின் மரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, சிறுமுகை வனப்பகுதியில் யானைகளின் உயிரிழப்பை கண்டறிய கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டது, இன்று அந்த குழுவினர் அவர்களது ஆய்வினை துவங்கியுள்ளனர்.



அந்த குழு யானைகளின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது, குழுவிற்கு நான்கு பேர் என ஜந்து குழுக்களாக பிரிந்து யானைகள் உயிரிழந்த பகுதிகளில், குறிப்பாக சிறுமுகை வனச்சரக பகுதியான பெத்திகுட்டை, உளியூர், கூத்தாமண்டி வனப்பகுதிகளில் யானைகள் உட்கொள்ளும் உணவு, தண்ணீர், சாணம் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, சிறுமுகையில் பவானி ஆற்று பகுதியில் மூடிய நிலையில் உள்ள ஆலைக்குள் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால், அங்குள்ள நச்சு பொருட்களை ஏதாவது யானைகள் உட்கொள்கிறதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரனையில் இறங்கியுள்ளனர்.

இன்று அந்த ஆலை வளாகத்தில் நுழைந்த வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்குள்ள பகுதிகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...