சர்வதேச கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கு: சிபிசிஐடி காவல் துறையினரிடம் இந்திய உளவு அமைப்பான ரா புலனாய்வு அதிகாரிகள் ஆலோசனை

கோவை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினரிடம் இந்திய உளவு அமைப்பான ரா புலனாய்வு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினரிடம் இந்திய உளவு அமைப்பான ரா புலனாய்வு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கட லொக்கா அவனது காதலி எனக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த அமானி தான்ஜி அவனுக்கு குடியுரிமையை மறைத்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இந்தியாவில் பெற உதவியதாக, மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி ஐஜி சங்கர் இந்த வழக்கை விசாரிக்க 7 தனிப்படைகள் டிஎஸ்பி ராஜூ தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக, கோவை காளப்பட்டியில் அங்கொட லொக்கா மற்றும் அவனது காதலி அமானி தான்ஜிடன் வசித்து வந்ததாக கூறப்படும் வீட்டில், டிஎஸ்பி ராஜு தலைமையில் 10 சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டர். இதேபோல திருப்பூர் மற்றும் மதுரையில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் அங்கொட லொக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான "ரா" புலனாய்வு அமைப்பை சேர்ந்த 5 அதிகாரிகள் கோவையில் ஐஜி சங்கர் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை தானா..? என்பதை உறுதி செய்ய உடற்கூறாய்வின் போது பரிசோதனைக்காக உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகிய உறுப்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், லோக்கவிற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் வங்கி கணக்குகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி பணப்பரிவர்த்தணை நடைபெற்று உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பான இண்டர்போல் கடந்த 2019ஆம் ஆண்டு அங்கொட லொக்காவை தேடப்பட்டு வரும் நபராக ரெட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...