கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிறைந்து வருகின்ற நிலையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிறைந்து வருகின்ற நிலையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருவதால் நொய்யலின் பாதையில் பல இடங்களில் ஆற்றில் நுரை போன்ற படலம் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நொய்யல் ஆற்றின் கிளை வாய்கால்களை சரிவர தூர்வாரரதால் 400 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக சூலூர் ஒன்றியம், ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம் கிராம மக்கள் கூறுகின்றனர்.
முத்துக்கவுண்டன் புதூர் மாசணியம்மன் கோவில் அருகில் தான் நொய்யல் தடுப்பணை உள்ளது. அங்கிருந்து துவங்கும் கிளை வாய்க்கால் வழியாக ராசிப்பாளையம், அருகம்பாளையம், பகுதிகளை அடைந்து மீண்டும் நொய்யலில் கலந்துவிடுகிறது. நீர் வரும் பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருப்பதால் புதர் மண்டி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவ்வூரை சேர்ந்த விவசாயி ஒருவரை கேட்ட போது, இரு மாதங்களுக்கு முன்னர் பாலம் கட்டுவதற்காக தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்தனர். அந்த பணியுடன் சேர்த்து வாய்க்கால்களை சரி செய்யப்படும் என பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சரி செய்யப்படவில்லை, என்றார்.
மேலும், ஆற்றுநீருடன், சாக்கடை சேர்ந்து குட்டை போன்று காட்சியளிக்கிறது. இது குறித்து பஞ்சாய்த்து தலைவரிடம் கூறி வருகிறோம். அவர்களும் பொதுப்பணித்துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பொதுப்பணித்துறையோ தூர்வார போதிய நிதி இல்லை என்று பதில் அளித்து வருகிறார்கள். மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறோம். ஆண்டு முழுவதும் சாக்கடையாக வரும் நொய்யலில் இப்பொழுது தான் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.
குறிப்பாக, ராசிப்பாளையம் முதல் பிள்ளையார் கோவில் வரை தூர் வாரி ஷர்ட்டர் பழுது நீக்கி, மண் மேடுகளை சரி செய்தால் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும், என்று தெரிவித்தார்.
மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருவதால் நொய்யலின் பாதையில் பல இடங்களில் ஆற்றில் நுரை போன்ற படலம் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நொய்யல் ஆற்றின் கிளை வாய்கால்களை சரிவர தூர்வாரரதால் 400 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக சூலூர் ஒன்றியம், ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம் கிராம மக்கள் கூறுகின்றனர்.
முத்துக்கவுண்டன் புதூர் மாசணியம்மன் கோவில் அருகில் தான் நொய்யல் தடுப்பணை உள்ளது. அங்கிருந்து துவங்கும் கிளை வாய்க்கால் வழியாக ராசிப்பாளையம், அருகம்பாளையம், பகுதிகளை அடைந்து மீண்டும் நொய்யலில் கலந்துவிடுகிறது. நீர் வரும் பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருப்பதால் புதர் மண்டி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவ்வூரை சேர்ந்த விவசாயி ஒருவரை கேட்ட போது, இரு மாதங்களுக்கு முன்னர் பாலம் கட்டுவதற்காக தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்தனர். அந்த பணியுடன் சேர்த்து வாய்க்கால்களை சரி செய்யப்படும் என பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சரி செய்யப்படவில்லை, என்றார்.
மேலும், ஆற்றுநீருடன், சாக்கடை சேர்ந்து குட்டை போன்று காட்சியளிக்கிறது. இது குறித்து பஞ்சாய்த்து தலைவரிடம் கூறி வருகிறோம். அவர்களும் பொதுப்பணித்துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பொதுப்பணித்துறையோ தூர்வார போதிய நிதி இல்லை என்று பதில் அளித்து வருகிறார்கள். மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறோம். ஆண்டு முழுவதும் சாக்கடையாக வரும் நொய்யலில் இப்பொழுது தான் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.
குறிப்பாக, ராசிப்பாளையம் முதல் பிள்ளையார் கோவில் வரை தூர் வாரி ஷர்ட்டர் பழுது நீக்கி, மண் மேடுகளை சரி செய்தால் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும், என்று தெரிவித்தார்.