திருப்பூர்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் 20% திருப்பி அனுப்புவதாகவும், அதேபோல பாலின் டிடிஎஸ் தன்மை குறைவாக இருப்பதாக கூறி ஏற்கனவே கொள்முதல் செய்த விலைக்கு கொள்முதல் செய்யாமல் குறைந்த விலை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஆவின் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் 20% திருப்பி அனுப்புவதாகவும், அதேபோல பாலின் டிடிஎஸ் தன்மை குறைவாக இருப்பதாக கூறி ஏற்கனவே கொள்முதல் செய்த விலைக்கு கொள்முதல் செய்யாமல் குறைந்த விலை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஆவின் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.