திருப்பூர்: ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் என திருப்பூரில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்: ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் என திருப்பூரில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், திருப்பூரிலிருந்து அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது நாடெங்குமுள்ள நீதியை விரும்பக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்காதது குறித்த கேள்விக்கு, அதிமுக-பாஜக வெவ்வேறு அரசியல் இயக்கங்கள் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம் ஆனால், புதிய கல்விக் கொள்கை தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கக் கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம், ஆனால் தமிழகத்தில் தற்போது வரை ஆங்கில மொழி என்ற ஒரு மொழிக் கொள்கையே இருந்து வருவதாகவும், பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களே தெரியாத வகையில் இருக்கும் சூழ்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று உரக்கச் சொல்கிறது. புதிய கல்விக் கொள்கைஇதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய புதிய கல்விக் கொள்கையை வரவேற்காமல் வசை பாடுபவர்கள் நிலை குறித்து காலம் பதில் சொல்லும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், திருப்பூரிலிருந்து அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது நாடெங்குமுள்ள நீதியை விரும்பக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்காதது குறித்த கேள்விக்கு, அதிமுக-பாஜக வெவ்வேறு அரசியல் இயக்கங்கள் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம் ஆனால், புதிய கல்விக் கொள்கை தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கக் கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம், ஆனால் தமிழகத்தில் தற்போது வரை ஆங்கில மொழி என்ற ஒரு மொழிக் கொள்கையே இருந்து வருவதாகவும், பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களே தெரியாத வகையில் இருக்கும் சூழ்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று உரக்கச் சொல்கிறது. புதிய கல்விக் கொள்கைஇதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய புதிய கல்விக் கொள்கையை வரவேற்காமல் வசை பாடுபவர்கள் நிலை குறித்து காலம் பதில் சொல்லும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.