பில்லூர் அணையில் இருந்து 17000 கன அடி நீர் வெளியேற்றம் - பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை நேற்று தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டது

நேற்று 22,000 கன தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

இதனையடுத்து, நேற்று மாலை சற்று நீர்வரத்து குறைந்து 12,000 கன அடியாக இருந்த நிலையில், இரவு மீண்டும் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, அட்டப்பாடி போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, இரவு முதல் மீண்டும் பில்லூர் அணைக்கான நீர்வரத்து 17,000கன அடியாக உயர்ந்தது. இதனால் தற்போது அணையில் இருந்து 17,000 கன அடி தண்ணீர் விநாடிக்கு உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது

இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக இன்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதனிடையே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 17,000 கன அடியாகவும் அதனை அப்படியே உபரியாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...