திருப்பூர்: பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் மோடி தலைமையில் 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறையில் அமைத்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், பொருளாதார சீரழிவை கொரோனா என்ற பெயரில் மறைப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் மோடி தலைமையில் 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறையில் அமைத்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், பொருளாதார சீரழிவை கொரோனா என்ற பெயரில் மறைப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.