கோவை: இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்காவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ ஆய்விற்கு உட்படுத்த சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
கோவை: இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்காவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ ஆய்விற்கு உட்படுத்த சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்காவை கோவையில் அவரது காதலி விஷம் வைத்து கொன்று விட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் வசித்து வந்த பிரதீப் சிங் என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைத்ததன் பேரில் சந்தேகத்திற்கு இடமான மரணம் என பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரதீப் சிங்கின் உறவினர்கள் என கூறி சிவகாமி சுந்தரி மற்றும் அமானி தான்ஜி என்ற இரு பெண்கள் அவரது உடலைப் பெற்றுச் சென்று ஜூலை 4ம் தேதி மதுரையில் தகனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட பீளமேடு காவல்துறையினர் பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை போலியானது என கண்டறிந்தனர். இதனையடுத்து, சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் உயிரிழந்த நபருடன் வசித்து வந்த இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த அமானி தான்ஜி மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி என்ற இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் இலங்கையில் பல்வேறு கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கடத்தல் கும்பல் தலைவன் மதுமா சந்தன வசந்தா பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பது தெரிய வந்தது. அவனுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சிவகாமி சுந்தரியின் நண்பர் தியானேஸ்வரன் உதவியது தெரியவந்தது.

இதுகுறித்து புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்த காவல்துறையினர் ஈரோடு இந்திராநகர் பகுதியில் வைத்து தியானேஸ்வரணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இருந்து வெளிநாட்டு கரன்சிகள், லேப்டாப் மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, மூவரையும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அமானி தான்ஜிக்கு கருச்சிதைவு
ஏற்பட்ட காரணமாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி ராஜு தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து அங்கொட லொக்கா உயிரிழப்பு மற்றும் அவனது உடல் தகனம் குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கோவையில் அங்கொட லொக்கா வசித்து வந்த சேரன் மாநகர் பகுதியில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி ராஜு தலைமையில் 10 பேர் கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், அருகில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களிலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அங்கோடா லொக்காவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ ஆய்விற்கு உட்படுத்த சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
அங்கோடா லொக்காவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது கல்லீரல் போன்ற பாகங்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். அதனை டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் இலங்கையில் அவரின் உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் இரத்த மாதிரிகள் எடுத்து அதனையும் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தெரிவிக்க சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்காவை கோவையில் அவரது காதலி விஷம் வைத்து கொன்று விட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் வசித்து வந்த பிரதீப் சிங் என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைத்ததன் பேரில் சந்தேகத்திற்கு இடமான மரணம் என பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரதீப் சிங்கின் உறவினர்கள் என கூறி சிவகாமி சுந்தரி மற்றும் அமானி தான்ஜி என்ற இரு பெண்கள் அவரது உடலைப் பெற்றுச் சென்று ஜூலை 4ம் தேதி மதுரையில் தகனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட பீளமேடு காவல்துறையினர் பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை போலியானது என கண்டறிந்தனர். இதனையடுத்து, சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் உயிரிழந்த நபருடன் வசித்து வந்த இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த அமானி தான்ஜி மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி என்ற இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் இலங்கையில் பல்வேறு கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கடத்தல் கும்பல் தலைவன் மதுமா சந்தன வசந்தா பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பது தெரிய வந்தது. அவனுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சிவகாமி சுந்தரியின் நண்பர் தியானேஸ்வரன் உதவியது தெரியவந்தது.

இதுகுறித்து புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்த காவல்துறையினர் ஈரோடு இந்திராநகர் பகுதியில் வைத்து தியானேஸ்வரணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இருந்து வெளிநாட்டு கரன்சிகள், லேப்டாப் மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, மூவரையும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அமானி தான்ஜிக்கு கருச்சிதைவு
ஏற்பட்ட காரணமாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி ராஜு தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து அங்கொட லொக்கா உயிரிழப்பு மற்றும் அவனது உடல் தகனம் குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கோவையில் அங்கொட லொக்கா வசித்து வந்த சேரன் மாநகர் பகுதியில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி ராஜு தலைமையில் 10 பேர் கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், அருகில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களிலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அங்கோடா லொக்காவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ ஆய்விற்கு உட்படுத்த சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
அங்கோடா லொக்காவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது கல்லீரல் போன்ற பாகங்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். அதனை டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் இலங்கையில் அவரின் உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் இரத்த மாதிரிகள் எடுத்து அதனையும் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தெரிவிக்க சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.