கோவை: கோவை நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை: கோவை நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை நொய்யல் ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், போத்தனூர் ஜம் ஜம் நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப்பிற்குள் புகுந்தது.
மேலும், போத்தனூர் சாய்நகரில் உள்ள 10 தெருக்களுக்குள் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர். அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை நொய்யல் ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், போத்தனூர் ஜம் ஜம் நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப்பிற்குள் புகுந்தது.
மேலும், போத்தனூர் சாய்நகரில் உள்ள 10 தெருக்களுக்குள் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர். அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.