திருப்பூர்: தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
திருப்பூர்: தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீதி மன்றங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை நீடித்து வருகிறது.
முக்கியமான வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலம் நடந்து வரும்.நிலையில், வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைகளை ஏற்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்கவேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், 3 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சார்பு நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீதி மன்றங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை நீடித்து வருகிறது.
முக்கியமான வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலம் நடந்து வரும்.நிலையில், வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைகளை ஏற்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்கவேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், 3 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சார்பு நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.