கோவை: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்று படுக்கைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
கோவை: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்று படுக்கைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு ரக பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வரும் நிலையில், நேற்று பெய்த கன மழை காரணமாக அறுவடை செய்ய தயார் நிலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம் தண்ணீரில் மூழ்கியும், பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடபட்ட வாழைகள் பலந்த காற்றின் காரணமாக சாய்ந்து நாசம் அடைந்து உள்ளது.
குறிப்பாக, தொண்டாமுத்தூர் முண்டந்துறை, நல்லூர் வயல், மரக்காடு பகுதிகளில் கதளி ரக வாழைகளை ஏராளமானோர் பயிரிட்டு உள்ளனர். நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையில் குழை தள்ளபட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து உள்ளது.

இது குறித்து, முண்டந்துறை பகுதியை சேர்ந்த விவசாயி ராசு என்பவரின் ஏழரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து கண்னீர் மல்க அவர் கூறுகையில், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாகவும் தன்னிடம் உள்ள இரண்டு டிராக்டர் டெம்போ உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து வாழை பயிரிடப்பட்டதாக கூறியவர், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருந்த நிலையில் 9000 வாழைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவருக்கு 25 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.
இதேபோல், தனசேகர் என்பவரது தோட்டத்தில் பயிரிடபட்ட 900 வாழைகள் நாசம் அடைந்து உள்ளது. இதேபோல் பாக்கு மரங்கள், மக்காசோளம் பயிரிட்டு இருந்த பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் இலை, வாழை, நேந்திரம், கதளி ரக வாழைகள் பயிரிடபட்டு இருந்த நிலையில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மழையின் காரணமாக சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேத மதிப்பு குறித்து ஆய்வறிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் கல்கொத்தி மலை பகுதியில் பழங்குடியினர் வசித்து வரும் இடத்தில் 26 புதிய வீடுகள் கட்டபட்டு வரும் நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள வனப்பகுதியில் தற்காலிக வீடுகளில் தங்கி உள்ளனர்.
அதன் மேற்கூரைகள் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து முடிவடையாத வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
சிறுவாணி சாலையில் இருட்டு பள்ளம், சாடிவயல் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாக ஏழு மழை கிராமங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு ரக பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வரும் நிலையில், நேற்று பெய்த கன மழை காரணமாக அறுவடை செய்ய தயார் நிலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம் தண்ணீரில் மூழ்கியும், பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடபட்ட வாழைகள் பலந்த காற்றின் காரணமாக சாய்ந்து நாசம் அடைந்து உள்ளது.
குறிப்பாக, தொண்டாமுத்தூர் முண்டந்துறை, நல்லூர் வயல், மரக்காடு பகுதிகளில் கதளி ரக வாழைகளை ஏராளமானோர் பயிரிட்டு உள்ளனர். நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையில் குழை தள்ளபட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து உள்ளது.

இது குறித்து, முண்டந்துறை பகுதியை சேர்ந்த விவசாயி ராசு என்பவரின் ஏழரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து கண்னீர் மல்க அவர் கூறுகையில், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாகவும் தன்னிடம் உள்ள இரண்டு டிராக்டர் டெம்போ உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து வாழை பயிரிடப்பட்டதாக கூறியவர், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருந்த நிலையில் 9000 வாழைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவருக்கு 25 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.
இதேபோல், தனசேகர் என்பவரது தோட்டத்தில் பயிரிடபட்ட 900 வாழைகள் நாசம் அடைந்து உள்ளது. இதேபோல் பாக்கு மரங்கள், மக்காசோளம் பயிரிட்டு இருந்த பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் இலை, வாழை, நேந்திரம், கதளி ரக வாழைகள் பயிரிடபட்டு இருந்த நிலையில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மழையின் காரணமாக சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேத மதிப்பு குறித்து ஆய்வறிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் கல்கொத்தி மலை பகுதியில் பழங்குடியினர் வசித்து வரும் இடத்தில் 26 புதிய வீடுகள் கட்டபட்டு வரும் நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள வனப்பகுதியில் தற்காலிக வீடுகளில் தங்கி உள்ளனர்.
அதன் மேற்கூரைகள் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து முடிவடையாத வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
சிறுவாணி சாலையில் இருட்டு பள்ளம், சாடிவயல் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாக ஏழு மழை கிராமங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.