கோவை: வால்பாறையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எம்எல்ஏ கஸ்தூரி வாசு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கோவை: வால்பாறையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எம்எல்ஏ கஸ்தூரி வாசு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த பெண் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவர் வசித்து வந்த சோலையார் எஸ்டேட் மூன்றாம் பிரிவில் உள்ள இரண்டு லைன்களில் 13 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், இன்று வால்பாறை வந்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சோலையார் எஸ்டேட்டிற்கு சென்று தனிமை படுத்தப்பட்டுள்ள 13 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வால்பாறை வி அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், வாசு பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த பெண் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவர் வசித்து வந்த சோலையார் எஸ்டேட் மூன்றாம் பிரிவில் உள்ள இரண்டு லைன்களில் 13 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், இன்று வால்பாறை வந்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சோலையார் எஸ்டேட்டிற்கு சென்று தனிமை படுத்தப்பட்டுள்ள 13 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வால்பாறை வி அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், வாசு பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.