நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வரும் நிலையில் 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வரும் நிலையில் 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி விரைந்துள்ளனர்.
நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேன்வயல், இருவயல், புறமணவயல் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 200ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு அத்திப்பாளி மற்றும் புத்தூர்வயல் அரசு பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மஞ்சூர், அவலாஞ்சி, பாேன்ற பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு அரசு அதிகாரிகள் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 500 முகாம்கள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி விரைந்துள்ளனர்.
நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேன்வயல், இருவயல், புறமணவயல் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 200ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு அத்திப்பாளி மற்றும் புத்தூர்வயல் அரசு பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மஞ்சூர், அவலாஞ்சி, பாேன்ற பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு அரசு அதிகாரிகள் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 500 முகாம்கள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.