தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் - மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல்

கோவை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல ஈட்டுறுதி மூலம் பணம் செலுத்துபவர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக பலர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழக அரசிடம் சில மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் கொரோனா சிகிச்சை பெற வரும் நபர்கள் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவமனை முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

மேலும், இதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் மக்கள் பயன்படும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...