தென்மேற்கு பருவமழையால் பில்லூர் அணையில் விநாடிக்கு 22,000 கன அடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை: தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ள நிலையில், விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ள நிலையில், விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்குத் தென்மேற்கு பருவமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு பத்தாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால் விரைவில் அணை நிரம்ப உள்ளது.

கேரளா காடுகள் மற்றும் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு, அட்டப்பாடி, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது, இதன் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து 1000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்ந்தது

மேலும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.



இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...