கோவையில் 96 சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளது

கோவை: கோவை மாவட்டத்தில் 96 சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி பெறாத தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வரும் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர், வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 96 சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி பெறாத தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வரும் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர், வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. இதனால், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ.2 ஆயிரம் நிதி தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கட்டுமான வாரியத்தில் 35 ஆயிரத்து 67 தொழிலாளர்கள், அமைப்புசாரா வாரியத்தில் 65 ஆயிரத்து 35 தொழிலாளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 102 தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று நிதி பெற தகுதியானவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், வங்கி கணக்கு உள்ளவர்கள், வங்கி கணக்கு விவரங்களை முறையாக சமர்பித்தவர்கள் என 96 சதவீதம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘கொரோனா நிதி பெற வங்கி கணக்கு இல்லாத தொழிலாளர்களுக்கு, அலுவலகம் மூலம் தபாலில் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் அந்த முகவரில் இல்லை என நிதி தரும்ப வந்துவிட்டது. அதே போல், சிலருக்கு வங்கி கணக்கிற்கு அனுப்பட்ட நிதியும் சில காரணங்களுக்காக திரும்ப வந்துவிட்டது."

இது தொடர்பாக தொழில் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது எனவும் அதன் படி நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் கொரோனா நிதி பெறாதவர்கள் வரும் 14ம் தேதிக்குள் வங்கி கணக்கு விவரங்களை ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...