கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா வழக்கு: விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலிசார்

கோவை: இலங்கையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அங்கடா லொக்கா, ஜூலை 3 ஆம் தேதி கோவையில் இறந்த நிலையில், அந்த வழக்கு குறித்த விசாரணையை தமிழக டிஜிபி நேற்று சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார்.


கோவை: இலங்கையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அங்கடா லொக்கா, ஜூலை 3 ஆம் தேதி கோவையில் இறந்த நிலையில், அந்த வழக்கு குறித்த விசாரணையை தமிழக டிஜிபி நேற்று சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார்.

இது குறித்த வழக்கு விசாரணைக்கான, ஆலோசனை கூட்டம் தொடங்கியது, இன்று ஐ.ஜி சங்கர் தலைமையில் கோவையில் தொடங்கியது. 

டி.எஸ்.பி மாடசாமி, உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டதிற்கு பின்னர் சேரன் மாநகர் பகுதியில் இலங்கை தாதா தங்கியிருந்த வீட்டில் சோதனைக்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையை சேர்ந்த மதுமாசந்தான லசந்தா பெரேரா (எ) அங்கடா லொக்கா (35). போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இவர் கோவை பீளமேட்டில் பிரதீப் சிங் என்ற பெயரில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி இவர் உயிரிழந்தார். இவரை இலங்கை போலீசார் வலை வீசி தேதி வந்த நிலையில் அவர் கோவையில் இறந்த தகவல் குறித்து தமிழக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 



இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் நேற்று கோவை வந்து, சிபிசிஐடி போலீஸாருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...